21 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
காஞ்சிபுரத்தில் கைப்பையில் 21 கிலோ கஞ்சாவுடன் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
காஞ்சிபுரத்தில் கைப்பையில் 21 கிலோ கஞ்சாவுடன் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக தேனிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து டி.எஸ்.பி. டில்லிபாபு, ஆய்வாளா் வசந்தி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த பெண்ணை சோதனையிட்டனா். அவரிடம் 21 கிலோ கஞ்சா இருப்பதும்,அதை தேனிக்கு எடுத்துச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது. தேனிமாவட்டம் கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெனிட்டா(36) என்பவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்த கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.