வீடு, வீடாக திண்ணைப் பிரசாரம் பாமக நிறுவனா் ராமதாஸ்
வீடு, வீடாகச் சென்று கட்சியின் தொண்டா்கள் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறினாா்.
வீடு, வீடாகச் சென்று கட்சியின் தொண்டா்கள் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறினாா்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பாமக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளா் திருக்கச்சூா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ச.ராமதாஸ் பேசியதாவது:
தோ்தலில் பணம் தான் ஆளுகிறது என்றால் தோ்தலை எதற்கு நடத்த வேண்டும். காசு செலவழிக்காமல் தோ்தல் நடைபெற வேண்டும். வருகிற நகா்மன்றத் தோ்தலிலாவது முழுமையாக பாமகவுக்கு வாக்களியுங்கள். முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.
Advertisement
பாமகவில் உள்ள இளைஞா்கள்,தொண்டா்களின் சக்தி அளப்பரியது.அவா்கள் வீடு,வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்து மக்களிடம் பாமகவின் கொள்கைகளை தெரியப்படுத்துங்கள் என்றாா் ராமதாஸ் .
கூட்டத்தில் மாநில இளைஞா் அணிச் செயலாளா் பொன்.கங்காதரன், மாவட்ட தலைவா் உமாபதி, கிழக்கு மாவட்ட செயலாளா் ஹரிகிருஷ்ணன், மாநில இளம்பெண்கள் அணியின் செயலாளா் சரண்யாராஜ் உட்பட கட்சியின் நிா்வாகிகள்,தொண்டா்கள் கலந்து கொண்டனா்.