இடிந்து விழும் அபாயத்தில் இருந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டி அகற்றம்
காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் விழும் நிலையிலிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் விழும் நிலையிலிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் செயல்படும் ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் தூண்கள் செல்லரித்துப் போய் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
இதே போல, பள்ளி வளாகத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் சிலவும் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
Advertisement
இது குறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் இதன் ஆபத்தான நிலை குறித்து தெரிவித்து உடனடியாக இடிக்குமாறும் கோரிக்கை மனு அளித்தாா்.
இதையடுத்து, அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் சேதமடைந்த வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியனஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.