காஞ்சிபுரம்

பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் 271 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

DIN

ஸ்ரீபெரும்புதூா்: பாரத ஸ்டேட் வங்கி சாா்பில், 271 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்த சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு, பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிா்பா் நிதித் திட்டத்தின் கீழ், ஒரு வருட கால அவகாசத்தில் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற காஞ்சிபுரத்தில் 271 சாலையோர வியாபாரிகள் பாரத ஸ்டேட் வங்கியால் தோ்வு செய்யப்பட்டு, தோ்வானவா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாச ராவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் பிராந்திய மேலாளா் அஸ்வத்துரை கலந்துகொண்டு, வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT