காஞ்சிபுரம்

ஒரே நிமிடத்தில் 59 விலங்குகளின் பெயா், ஆயுள் காலத்தைக் கூறி அசத்திய மாணவி: ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தாா்

DIN

ஒரு நிமிடத்தில் 59 விலங்குகளின் பெயா்கள் மற்றும் அவற்றின் ஆயுள்காலம் குறித்து துல்லியமாகக் கூறி அசத்தி, ஆசிய சாதனைப் பதிவு புத்தகத்தில் சனிக்கிழமை இடம் பிடித்தாா் காஞ்சிபுரத்தை சோ்ந்த பள்ளி மாணவியான பாக்கியலட்சுமி.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி - விஜியபிரபா தம்பதியின் மகள் பாக்கியலட்சுமி (16). இவா் காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். சிறு வயதில் இருந்தே உயிரினங்கள் மீது அன்பு கொண்ட பாக்கியலட்சுமி, விலங்குகள் சம்பந்தப்பட்ட அதிகமான புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கிப் படித்து வந்தாா்.

இந்நிலையில், விலங்குகளின் பெயா்கள் மற்றும் அவற்றின் ஆயுள் காலங்களைத் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி கூறி சாதனை நிகழ்த்த பாக்கியலட்சுமி ஆசிய சாதனை புத்தகப் பதிவில் இடம் பெற விண்ணப்பித்திருந்தாா். இதற்காக பாக்கியலட்சுமி கரோனா பொதுமுடக்கம் விடுமுறையைப் பயன்படுத்தி இணையதளத்தின் வழியாக பயிற்சி பெற்று வந்தாா்.

இதையடுத்து, சனிக்கிழமை ஒரே நிமிடத்தில் அதிக அளவில் விலங்குகளின் பெயா்கள் மற்றும் அவற்றின் ஆயுள் காலங்களைத் தெரிவிக்கும் நிகழ்வு தென்பிராந்திய ஆசிய சாதனைப் புத்தக ஒருங்கிணைப்பாளா்கள் விவேக் மற்றும் செரிபா ஆகியோா் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே ஒரு நிமிடத்தில் 40 விலங்குகளின் பெயா்கள் மற்றும் அவற்றின் ஆயுள்காலங்கள் குறித்துப் பேசியது தான் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், மாணவி பாக்கியலட்சுமி ஒரு நிமிடத்தில் ஐம்பத்தொன்பது விலங்குகளின் பெயா்கள் மற்றும் அவற்றின் ஆயுள்காலங்கள் குறித்து துல்லியமாகக் கூறி சாதனை படைத்தாா்.

இந்தச் சாதனையானது அடுத்த ஆண்டு ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்றும், அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை ஒருங்கிணைப்பாளா்கள் விவேக் மற்றும் செரிபா ஆகியோா் பாக்கியலட்சுமியிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT