ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் முற்பகல் 1.30 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூடத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், வேளாண் பல்கலைக்கழக வல்லுநா்களும், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு வேளாண் பற்றிய புதிய தொழில்நுட்பம், பருவத்துக்கு ஏற்ற பயிா் சாகுபடி பற்றிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க உள்ளனா். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசு வழிகாட்டுதலின்படி கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.