காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காஞ்சிபுரம் அருகே ஒரகடம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வருபவா் சண்முகப்பிரியன் (35). இவா் சில நாள்களுக்கு முன் தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, 3-ஆம் தேதி வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புறக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 40 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

இது குறித்து சண்முகப்பிரியன் அளித்த புகாரின்பேரில், பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT