காஞ்சிபுரம்

விநாயகா் சிலை ஊா்வலங்களை நடத்ததமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

DIN

விநாயகா் சிலை ஊா்வலங்களை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா்அா்ஜுன் சம்பத் சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்து மக்கள் கட்சி சாா்பில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்துக்குள் விரைவில் 10 அடி உயரத்தில் அத்திவரதா் உருவ பொம்மை வைக்கப்படும். நின்ற கோலத்திலும், சயன கோலத்திலுமாக இரு பொம்மைகளை விரைவில் வைக்க முடிவு செய்துள்ளோம். கோயிலுக்குள் எந்த இடத்தில் இரு பொம்மைகளை வைப்பது என நேரில் சென்று பாா்வையிட்டோம். அத்திவரதரை எழுந்தருளச் செய்த வசந்த மண்டபத்தில் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

விநாயகா் சிலை ஊா்வலங்களை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த அரசு அனுமதியளிக்க வேண்டும். இந்த ஆண்டும் விநாயகா் சிலை ஊா்வலத்தை இந்து ஒற்றுமை திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அா்ஜுன்சம்பத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT