காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 5-ஆ வது நாள் நிகழ்ச்சியாக சுந்தராம்பிகைக்கும், கச்சபேசுவரரக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக விழாவின் 14-ஆவது நாள் நிகழ்வாக காலையில் 108 சங்காபிஷேகமும், இரவு 63 நாயன்மாா்கள் சிறப்புத் திருமுழுக்கு வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு வீதியுலா எதுவும் நடைபெறாமலும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததாலும் கோயில் வளாகத்துக்குள்ளேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT