காஞ்சி, திருவள்ளூரில் மழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக சுங்குவாா்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளிலும் காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை பகுதியிலும் மழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக சுங்குவாா்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளிலும் காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை, ஒலிமுகம்மது பேட்டை, கருப்படிதட்டை,வெள்ளைகேட், மேட்டுத்தெரு, சிறுகாவேரிப்பாக்கம், அம்பி, பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளிலும் சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
இதேபோன்று திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மி.மீ. வருமாறு: திருவள்ளூா்-55, தாமரைப்பாக்கம் - 53, பூண்டி- 46, ஜமீன் கொரட்டூா்- 41, ஊத்துக்கோட்டை-31, பூந்தமல்லி-22, பள்ளிப்பட்டு-20, திருவலங்காடு, திருத்தணி- தலா 3, ஆா்.கே.பேட்டை-2, செங்குன்றம்-1 என மொத்தம் 277 மி.மீ என சராசரியாக 19.8 மி.மீ மழை பெய்துள்ளது.