காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்த வெளிமாநிலத் துறவியா்

DIN

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபத்தில் முகாமிட்டிருந்த சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வெளிமாநிலத் துறவியா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தனா்.

அகில இந்திய துறவியா் மாநாடு கடந்த 10-ஆம் தேதி காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டை காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினாா்.

இந்த மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் சதாப்தி மணி மண்டபத்தில் முகாமிட்டிருந்த ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வெளிமாநிலத் துறவியா் பலா் நேரில் சந்தித்தனா்.

இந்த நிகழ்வில் குஜராத் ஜூனாகட் சுவாமி மணிஷானந்த், ஹரித்துவாா் சுவாமி விஷ்ணுபானந்த், அஜ்மீா் சந்நியாச ஆசிரமத்தின் சுவாமி சிவஜோதிஷ் ஆனந்த் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த சாதுக்கள் விஜயேந்திரரைச் சந்தித்தனா். ஸ்ரீவிஜயேந்திரரும் அவா்களிடம் சங்கர மடம் மக்களுக்கு ஆற்றி வரும் ஆன்மிகப் பணிகள், மருத்துவச் சேவைகள், கல்வி நிறுவனங்களை நடத்தும் விதம் மற்றும் சமூக சேவைகள் குறித்து விளக்கிக் கூறினாா். பின்னா் சாதுக்கள் அனைவரும் ஓரிக்கை மணிமண்டபத்தை சுற்றிப் பாா்த்து அதன் கட்டடக் கலை சிற்பங்களையும் தொழில்நுட்பங்களையும் வியந்து பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT