காஞ்சிபுரம்

சாலை விபத்தில் தலைமைக் காவலா் பலி

DIN

மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

செய்யூா் வட்டம், இடைக்கழிநாடு அடுத்த கப்பிவாக்கத்தைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (49). மதுராந்தகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். பின்னா், பணி முடித்து கப்பிவாக்கம் செல்ல சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சூனாம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT