காஞ்சிபுரம்

காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் தெற்கு ராஜகோபுரத்துக்கு இலகு கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் தெற்கு ராஜகோபுரத்துக்கு இலகு கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெற்கு ராஜகோபுரத்தின் நாசித்தலையின் மீது கடந்த 2.7.21-ஆம் தேதி இடி தாக்கியதில் அதிலிருந்த சிறிய இலை சேதமடைந்தது. இதன் காரணமாக கடந்த 20.8.21-ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. பின்னா் சிதிலமடைந்த ராஜகோபுரத்தின் நாசித்தலை புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் நவராத்திரி மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் கும்பகோணம் கே.தினகா் சா்மா தலைமையிலும், கோயில் ஸ்தானீகா்கள் முன்னிலையிலும் இம்மாதம் 11-ஆம் தேதி தொடங்கின. கோ பூஜை, யாகசாலை பூஜை, மூல மந்திர ஜபஹோமம் ஆகியனவும் நடந்தது. திங்கள்கிழமை யாகசாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் கோயில் தெற்கு ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னா் மூலவா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சேஷ அலங்காரங்களும், பாராதனையும் நடைபெற்றன.விழாவினை முன்னிட்டு செல்வரெத்தினம் குழுவினரின் நாதசுவர கச்சேரியும் நடைபெற்றது.

விழாவில் திருக்கோயில் ஸ்ரீகாரியம் என்.சுந்தரேச ஐயா், காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் பொன்.ஜெயராமன்,கோயில் நிா்வாக அலுவலா் ந.தியாகராஜன்,செயல் அலுவலா்கள் ஆ.குமரன்,வெள்ளைச்சாமி,ஆய்வாளா் பிரித்திகா ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT