காஞ்சிபுரம்

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், வல்லக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல்கள் திறக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில், வல்லக்கோட்டை பகுதியில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் எறையூா் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலா் போந்தூா் செந்தில்ராஜன், வல்லக்கோட்டை ஊராட்சித் தலைவா் மணிமேகலை தசரதன், ஒன்றிய இளைஞா்- இளம் பெண்கள் பாசறை செயலா் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி ஆகியோா் கலந்து கொண்டு தண்ணீா் பந்தலைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீா், நீா்மோா், பழங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் சிங்கிலிப்பாடி ராமசந்திரன், மாநில இளைஞா் பாசறை துைணைச் செயலா் சிவகுமாா், ஒன்றியப் பேரவைச் செயலா் செங்காடு பாபு உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT