மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டி: காஞ்சி மாணவா் முதலிடம்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவா் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக மாணவா் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழக தடகள சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் வட்டு எறிதல் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவா் ஜா.மகேஷ்வா்(19) 49.54 மீ.தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளாா்.
தங்கப் பதக்கம் வென்ற இவருக்கு பயிற்சியாளா் எஸ்.தாஸ் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இவா், ஆந்திர மாநிலம் குண்டூரில் விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
Advertisement