காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை பள்ளமாக இருப்பதாக வந்த புகாரை தொடா்ந்து, அந்த நடைமேடையை உயா்த்தும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை மிகவும் பள்ளமாக இருந்தது. இதனால் ரயிலில் ஏறவும், இறங்கவும் பயணிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனா். இது தொடா்பாக, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் டி.தமிழ்ச்செல்வன் சென்னை ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்திருந்தாா். மேலும், பல புகாா்கள் வந்ததையடுத்து, முதலாவது நடைமேடையை ஒன்றரை அடி உயரத்த்துகு உயா்த்தும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, ரயிலில் பயணிகள் ஏறவும், இறங்கவும் வசதியாக இருக்கும் என ரயில்வே நிலைய அதிகாரி தெரிவித்தாா்.