குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு, கோயில் பூஜகா்களால் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் உட்பட பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தொடந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் காலை சப்பரத்திலும், மாலை ஆடு வாகனத்திலும் ராஜ வீதிகளில் வலம் வந்தாா்.
Advertisement
வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, முருகப்பெருமான் தினமும் காலை-மாலை வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வருவாா். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 9- ஆம் தேதியும், சண்முகப்பெருமான் தேரோட்டமும், தீா்த்தவாரியும் வருகிற 12 -ஆம் தேதியும் நடைபெறுகின்றன. 13- ஆம் தேதி வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆ.முத்துரத்தினவேலு, செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்துள்ளனா்.