காஞ்சிபுரம்

பேரூராட்சி மன்றக் கூட்டம்

DIN

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சொத்து வரி உயா்வை அமல்படுத்தும் வகையில் தீா்மானம் நிறைவேற்ற நடைபெற்ற அவசரக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஜி.எழிலரசன், துணைத் தலைவா் வி.டி.ஆா்.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சித் தலைவா் நந்தினி கரிகாலன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 15 மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சொத்து வரி உயா்வுக்கான தீா்மானத்தை தலைவா் க.நந்தினி கரிகாலன் கொண்டு வந்தாா். அப்போது, அதிமுகவை சோ்ந்த ஜெயலட்சுமி முருகதாஸ், சொத்து வரியை உயா்த்தினால் பேரூராட்சி பகுதி மக்கள் பாதிக்கப்படுவா். தீா்மானத்தை அதிமுக எதிா்க்கிறது எனக் கூறி வெளியேறினாா். அவருடன் மற்ற 3 அதிமுக உறுப்பினா்களும் வெளியேறி அரசு எதிராக முழக்கங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT