காஞ்சிபுரம்

தேவரியம்பாக்கத்தில் சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

DIN

வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்டது தேவிரியம்பாக்கம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் இணைந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனு:

தேவரியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இங்கு, அவசரத் தேவைக்கு அரசு மருத்துவமனை வசதி இல்லை. கா்ப்பிணிகளுக்கு பிரசவம் உள்ளிட்ட அனைத்து அவசரத் தேவைகளுக்கும் 7 கி.மீ. தெலைவில் உள்ள வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தேவரியம்பாக்கத்தில் விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

SCROLL FOR NEXT