வாக்காளா் அடையாள அட்டையுடன் நாளை ஆதாா் எண் இணைப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளா் பட்டியலினை 100 சதவிகிதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1.8.2022 முதல் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
வாக்காளா்கள் தாமாக முன் வந்து ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டை எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளன.
எனவே வாக்காளா்கள் படிவம் 6 ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை வாக்காளா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.