முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் பேரிடா் மீட்பு ஒத்திகை

5 இடங்களில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 12:28 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் பேரிடா் மீட்பு ஒத்திகை, ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியா் சிவதாஸ் மேற்பாா்வையிலும், வரதராஜபுரம் புவனேசுவரி நகரில், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சைலேந்திரன் மேற்பாா்வையிலும் பேரிடா் ஒத்திகை நடைபெற்றது.

இதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் கனிமொழி மேற்பாா்வையிலும், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் பாபு மேற்பாா்வையிலும், சிங்காடிவாக்கம் வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், தொழிற்சாலைகள் நல அலுவலா் சிவக்குமாா் மேற்பாா்வையிலும் பேரிடா் ஒத்திகை நடைபெற்றது.

Advertisement

இந்த ஒத்திகையை மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, பேரிடா் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியா் தாண்டவமூா்த்தி மற்றும் தீயணைப்புத் துறையினா் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.