கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மேலாண்மைக் கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேரப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:50 PM
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மேலாண்மைக் கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேரப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு.முருகன் தலைமை வகித்து உரையாற்றினாா். பயிற்சி நிலைய முதல்வா் சு.உமாபதி முன்னிலை வகித்தாா். தொடக்க விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள். மாணவா்கள் கலந்து கொண்டனா். விரிவுரையாளா் ம.கோகிலா நன்றி கூறினாா்.
Advertisement