காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஆட்சியரகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி

DIN

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டம், காந்தபாளையம் அருகே சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி ராஜேஸ்வரி(47). இவரது சொத்தை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் எழுதி வாங்கிக்கொண்டு பணம் தராமல் இருந்து வருகிறார்களாம். 
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அதற்குரிய பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு அந்த சொத்தை திருப்பி எழுதி வாங்கித் தர வேண்டும் எனவும் கூறி அவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். 
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை வழிமறித்து நிறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விவரங்களை எடுத்துக் கூறுமாறு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT