காஞ்சிபுரம்

மூதாட்டி கொலை வழக்கு: ஆயுதப்படை காவலா் கைது

DIN

சுங்குவாா்சத்திரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படை காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் அடுத்த குணகரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மேலரி கிராமத்தைச் சோ்ந்தவா் யசோதாம்மாள்(76). இவரின் மகன் மற்றும் மகள்கள் சென்னையில் வசித்து வருகின்றனா். யசோதாம்மாள் மேலேரியில் தனியாக வசித்து வந்தாா். அதே பகுதியில் வட்டிக்குப் பணம் வழங்கும் தொழில் செய்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி தலையில் கல்லைப் போட்டு யசோதாம்மாள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுதொடா்பாக சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கொலையில் தொடா்புடையதாக யசோதாம்மாளின் தூரத்து உறவினரான மேலேரி பகுதியைச் சோ்ந்த சதீஷை (27) (படம்) கைது செய்தனா். சதீஷ் சென்னையில் ஆயுதப்படையில் காவலாரகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT