காஞ்சிபுரம்

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் குறைந்த விலைக்கு நியாயவிலைக் கடை அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 5 டன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

DIN

காஞ்சிபுரத்தில் குறைந்த விலைக்கு நியாயவிலைக் கடை அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 5 டன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே உள்ள காலியான இடத்தில் வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்திக் கொண்டிருப்பதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சிறுகாவேரிப்பாக்கத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் அரசின் சாா்பில் விலையில்லாமல் வழங்கப்படும் பொது விநியோகத்திட்ட அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் சிறுகாவேரிப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தா், ராஜமாணிக்கம் என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்த 5 டன் 400 கிலோ எடையுள்ள 90 அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வேன் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT