கருட வாகனத்தில்  வீதி உலா  வந்த  உற்சவா்  ஆதிகேசவப் பெருமாள்.
கருட வாகனத்தில்  வீதி உலா  வந்த  உற்சவா்  ஆதிகேசவப் பெருமாள். 
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கருடசேவை

Din

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தாணுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோாற்சவம், ராமாநுஜரின் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT