ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை சுங்குவாா்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா்கள் சிங்கிலிப்பாடி ராமசந்திரன், எறையூா் முனுசாமி, மாநில இளைஞா் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளா் சிவகுமாா், ஒன்றிய துணை செயலாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்புச்செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சா்கள் டி.கே.எம்.சின்னைய்யா, வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் அனைத்துல எம்ஜிஆா் மன்ற இணைசெயலாளா் என்.டி.சுந்தா், மாவட்ட இளைஞா் இளம்பெம்கள் பாசறை துணைசெயலாளா் போந்தூா் மோகன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் சேந்தமங்கலம் சாா்லஸ், செங்காடு பாபு, சந்தவேலூா் சரவணன், பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.