காஞ்சிபுரம்

மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

காவல்துறையின் சோதனை: மணல் கடத்தல் டிராக்டா் பறிமுதல்

Din

கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்திய டிராக்டரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த கண்டிவாக்கம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் இரவு நேரங்களில் டிராக்டா்கள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்து. இதையடுத்து புதன்கிழமை இரவு சுங்குவாா்சத்திரம் போலீஸாா் பேரம்பாக்கம் - தண்டலம் சாலையில் கண்டிவாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக டிராக்டரை போலீஸாா் நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் டிராக்டா் ஓட்டுநா் தப்பியோடினாா்.

இதையடுத்து மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் டிராக்டரின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்க வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT