கைது செய்யப்பட்ட  பூஞ்சோலை,  முகுந்தன். 
காஞ்சிபுரம்

குன்றத்தூரில் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

DIN

குன்றத்தூா் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் அவா்களிடம் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் திங்கள்கிழமை வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்ட சாலையில் குன்றத்தூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த பூஞ்சோலை (37), முகுந்தன்(24) என்பதும் இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பூஞ்சோலை, முகுந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரி, ஒரு காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு கொடியேற்றம்!

7 உலகத் தலைவர்களை மட்டுமே விமான நிலையத்தில் வரவேற்றுள்ள மோடி! ஒருவர் மிஸ்ஸிங்!!

2-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை! 300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் முழக்கம்! மக்களவை ஒத்திவைப்பு

தந்தையின் நிர்வாண ஊர்வலத்தை காப்பாற்றிய ஜோ ரூட்..! ஹைடனின் மகள் கூறியதென்ன?

SCROLL FOR NEXT