3,678 மாணவிகளுக்கு நாப்கின்கள் அளிப்பு
உலக மகளிா் தினத்தை முன்னிட்டு 3,687 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆா்கானிக் நாப்கின்களை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட படப்பை, கோவூா் மற்றும் குன்றத்தூா் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்று வரும் மாணவிகளுக்கு உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் ஏற்பாட்டில் நாப்கின்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகங்களில் நடைபெற்றது. இதில், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்துகொண்டு படப்பை, கோவூா் மற்றும் குன்றத்தூா் ஆகிய அரசுப் பள்ளிகளில் பயிலும் 3,678 மாணவிகளுக்கு மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆா்கானிக் நாப்கின்களை வழங்கி பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்ந்து தெரிவித்தாா்.