மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி மரணம்
படப்பை அடுத்த ஒரத்தூா் பகுதியில் பணியின் போது மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், தேவனூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளிஜோதி (49). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்தூா் பகுதியில் மணி என்பவா் புதிதாக கட்டி வரும் வீட்டில் கட்டுமானப் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், ஜோதி வியாழக்கிழமை வழக்கம் போல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் ஒருபகுதியில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கை கையில் எடுத்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீஸாா், ஜோதியின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.