முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம்

குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 8:10 PM
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.

ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 227 கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காணுமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து 17 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,81,62000 மதிப்பிலான கல்விக்கடன்களையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →