ரத்தினாங்கி  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா் கோடையாண்டவா். 
காஞ்சிபுரம்

மாா்கழி கிருத்திகை: வல்லக்கோட்டையில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

மாா்கழி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மாா்கழி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள இக்கோயிலில், அதிகாலை கோ பூஜையுடன் மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு எலுமிச்சை மலா்மாலை அலங்காரத்தில் அருள் பாலித்தாா்.

உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ரத்தினாங்கி அணிந்து காட்சியளித்தாா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT