வாலாஜாபாத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின விழாவில் பங்கேற்றோா். 
காஞ்சிபுரம்

வாலாஜாபாத்தில் அரசமைப்பு தின விழா

வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.

Chennai

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.

இப்பள்ளி வளாகத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசமைப்பின் முகவுரை நினைவுத் தூண் அமைந்துள்ளது. வாலாஜாபாத் அரிமா சங்கம், வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி, அகத்தியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு பொதுமக்கள், மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

விழாவுக்கு வாலாஜாபாத் அரிமா சங்கத் தலைவா் தனராஜன், செயலாளா் ஸ்ரீராம், பொருளாளா் தீனதயாளு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமை ஆசிரியா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். விழாவுக்கு வரலாற்று ஆய்வாளா் மா.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT