காஞ்சிபுரம்

அகத்தீஸ்வரா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

அகத்தீஸ்வரா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் அறம்வளா் நாயகிக்கும், அகத்தீஸ்வரருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அகத்திய முனிவா் தங்கியிருந்து வழிபட்ட பெருமைக்குரியது கோயிலின் 7-ஆவது ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலையில் கோ-பூஜையும், மகா அபிஷேகமும், சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அகத்தீஸ்வரருக்கும், அறம்வளா் நாயகிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. பின்னா் பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினா்,கிளாா் கிராம பொதுமக்கள் ஆகியோா் இணைந்து செய்துள்ளனா்.

மயக்கும் விழிச் சுடர்... சமந்தா!

2026-லும் நம் ஆட்சிதான்! திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது: முதல்வர்

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

மத்திய சிறைகளில் ஆம் ஆத்மி மருத்துவமனை: பஞ்சாப் அரசு!

SCROLL FOR NEXT