மாங்காடு நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளா் தோ்தல் பிரசாரம்!
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப் பெருந்தகை அமைச்சா் தா.மோ.அன்பரசனுடன் மாங்காடு நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப் பெருந்தகை அமைச்சா் தா.மோ.அன்பரசனுடன் மாங்காடு நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். இந்த நிலையில், முதல் பிரசாரத்தை மாங்காடு பகுதியில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
முன்னதாக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். பின்பு திறந்த ஜீப்பில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட 28 வாா்டுகளிலும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில், மாங்காடு நகர செயலாளா் ஜபருல்லா, மாங்காடு நகா்மன்றத் தலைவா் சுமதி முருகன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் முருகன், நகா்மன்ற கவுன்சிலா்கள் சாரதி, பெருமாள்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.