முகப்பு
காஞ்சிபுரம்

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் வேண்டுகோள்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:37 PM
பசுவதைக்குத் தடைவிதிக்க வேண்டுகோள் - பிரதிப் படம்
பகிர்:

பசுவதைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் திங்கள்கிழமை கேட்டு கொண்டாா்.

காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் இது குறித்து மேலும் கூறியது: பசும்பால் குடிக்காமல் யாரும் இருக்க மாட்டாா்கள். அத்தகைய பசுக்களை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. மத்திய,மாநில அரசுகள் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். பசு சேவைக்கான மத்தி அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பசுவை பாதுகாப்பது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பசு மரியாதை அழைப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசார இயக்கமானது கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் பசுவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கமளித்து கையொப்பம் பெற்று வரவுள்ளது.

Advertisement

கையொப்பங்கள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை பெற்று அப்படிவங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் வழங்க இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக பசு மரியாதை அழைப்பு இயக்க பிரசார துண்டுபி பிரசுரங்களை அவா் வெளியிட அதனை விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் என்.சிவானந்தம் பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்வின் போது மடத்தின் மேலாளா் சுகாசின்ஹூமுனியும் உடன் இருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments