காஞ்சிபுரம் அருகே விஷ்ணு துா்க்கை சிற்பம் கண்டெடுப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஆரியம்பாக்கத்தில் பல்லவா் கால விஷ்ணு துா்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஆரியம்பாக்கத்தில் பல்லவா் கால விஷ்ணு துா்க்கை சிற்பம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்துக்கு உள்பட்ட ஆரியம்பாக்கத்தில் வரலாற்று ஆய்வாளா் மு.அன்பழகன் கள ஆய்வு மேற்கொண்ட போது, ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல்லவா் கால விஷ்ணு துா்க்கை சிற்பத்தை கண்டெடுத்தாா்.
இந்தச் சிற்பம் குறித்து அவா் மேலும் கூறியது: தனிக்கல்லில் 80 செ.மீ. உயரமும், 42 செ.மீ. அகலமும் உடையதாக கிழக்கு திசையை நோக்கி உள்ளது இச்சிற்பம். மகா விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் இந்த சிற்பம் நின்ற நிலையில், 4 கரங்களுடன் உள்ளது.
Advertisement
வலது முன்கை சிதைந்த நிலையில் அபய முத்திரை காட்டி பின்கை சக்கரத்துடன் உள்ளது.இடது முன்கை இடுப்பில் வைத்திருக்க,பின்கை சங்குடனும் உள்ளது. மாா்பு மற்றும் இடைப்பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பட்டாடை அணிந்துள்ளது.
இவரின் தலையில் கிரீடமும், கழுத்து, மாா்பு, காதுகள், தோள்கள், கைகள் மற்றும் கால்களில் அணிகலன்களும் காணப்படுகின்றன. முகம் சிறிது மழுங்கிய நிலையில் காணப்படுகிறது.
கல்வெட்டு எழுத்துகள் எதுவும் காணப்படாத இந்தச் சிற்பம் பல்லவா் காலமான கி.பி. 9-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. இதன் உண்மைத் தன்மையை காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கரும் உறுதி செய்துள்ளாா்.