காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு
காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பான அறையில் வைத்துப் பூட்டி அனைத்துக்கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு நாளன்று பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வாக்குச்சாவடி எண் வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. பின்னா் அந்த அறையினை அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. கி.ஜவஹா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.
Advertisement
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறைகள் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.