ஆண்டு விழாவையொட்டி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகாலட்சுமி தாயாா். 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெரு தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள செல்வ விநாயகா் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது செல்வவிநாயகா் கோயில். இந்தக் கோயில் வளாகத்திலேயே மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 15-ஆவது ஆண்டு விழாவையொட்டி, காலையில் செல்வவிநாயகா், மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மகாலட்சுமியும், செல்வவிநாயகரும் சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையொட்டி, மாலையில் மனநிம்மதி, தொழில் விருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

‘நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்’

மாசத்துக்கு ஒரு முறை வெளியே வருபவர்கள் அல்ல நாங்கள்! - உதயநிதி ஸ்டாலின்

பந்துவீச்சில் அசத்தல்; பேட்டிங்கில் சொதப்பல்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!!

என்.ஆா்.காங்கிரஸ் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா

பாஜகவின் கிளைச் செயலாளர் இபிஎஸ்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT