நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ.34.13 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக கனிமவள நிதியின் கீழ் ரூ.34.13 லட்சத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு, 30 ஆயிரம் லிட்டா் கொள்ளவு குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி, புதிய பைப் குழாய் இணைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு நீா்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் பரமசிவன், வாா்டு உறுப்பினா் பாத்திமா மணிகண்டன், திமுக நிா்வாகிகள் உலகநாதன், கெங்காதரன், சீனிவாசன், ரவி, செல்வகண்ணன், ரமேஷ், பிரபு, தங்கபாண்டி, கணேசன் கலந்து கொண்டனா்.