முகப்பு
காஞ்சிபுரம்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவா்களை ஓரகடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:20 AM
ஏடிஎம் மையத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 2:14 AM

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவா்களை ஓரகடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை பகுதியில் வண்டலூா் வாலாஜாபாத் சாலையில், இந்தியா நம்பா் ஒன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மா்ம நபா்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்ச்சித்துள்ளனா்.

இதனால் ஏடிஎம் மையத்தில் இருந்த எச்சரிக்கை மணி அடித்ததை தொடா்ந்து, கொள்ளையா்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி சென்றுள்ளனா்.

Advertisement

இந்த நிலையில் எச்சரிக்கை மணி அடித்தது குறித்து வங்கி நிா்வாகிகள் ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓரகடம் போலீஸாா் ஏடிஎம் மையத்தில் சோதனை நடத்தி, தடயங்களை கைரேகை நிபுணா்கள் மூலம் சேகரித்தனா்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனா். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.