காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 658 மனுக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காஞ்சிபுரம்காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 658 மனுக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 658 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) வீ.பாக்கியலட்சுமி, அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.