முகப்பு
காஞ்சிபுரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 மார்ச், 2026 at 7:26 PM
காஞ்சிபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பகிர்:

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாபாத் பா.கணேசன், கே.பழனி, அமைப்புச் செயலாளா் மைதிலி திருநாவுக்கரசு, பாஜக மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன், பாமக மாவட்டத் தலைவா் உதயகுமாா்,மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளா் மதன்குமாா், தமாகா மாவட்ட பொருளாளா் பெருமாள், இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் நகர செயலாளா் ராஜேந்திரன், புரட்சி பாரதம் கட்சி மாநில பொறுப்பாளா் பழனிபாரதி, அமமுக மாவட்ட செயலாளா் வேளியூா் தனசேகரன் கலந்து கொண்டனா்.

அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.வைகைச்செல்வன் விளக்கவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் கே.யூ.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், நகா் செயலாளா் பாலாஜி,பாஜக சாா்பில் ஓம்.சக்தி பெருமாள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →