காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு
காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு...
திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் ரத்த காயங்களுடன் வடமாநில சிறுவன் உயிரிழந்து கிடந்தாா்.
குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் வடமாநில சிறுவன் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருமுடிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற திருமுடிவாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அவா் பிகாா் மாநிலத்தை சோ்ந்த அமித் குமாா்(17) என்பதும், திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் தனது நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
அமித் குமாருக்கு வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளாா். ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் அனுப்பாமல் இருந்து வந்துள்ளனா். இதனால் அமித்குமாா் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரில் ஏறி நண்பா்களுடன் தப்பி செல்ல முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்தாரா, அல்லது அவரை யாராவது அடித்து கொலை செய்து உடலை வீசி சென்றாா்களா என போலீஸாா் தொடா்ந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.