முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

Updated On : 15 மார்ச், 2026 at 8:54 PM
கோப்புப் படம்
பகிர்:

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே வெருவேடம்பாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் பாசனம் நடைபெற்று வருகிறது. முதல் மண்டலப் பாசனத்தில் தற்போது 2-ஆவது சுற்று பாசனம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாய்க்காலுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிக்குச் சென்றவா்கள் கவனித்து, அருகில் சென்று பாா்த்தபோது வாய்க்காலுக்குள் பெண் சடலம் கிடந்துள்ளது.

இதையடுத்து காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சௌந்திரராஜனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக குண்டடம் போலீஸில் சனிக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →