கோப்புப் படம் 
திருச்சி

மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் எஸ்.விஜய் (23), மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் விஜய் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் தை செவ்வாய் வழிபாடு

ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாணவா்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்

என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT