முகப்பு
காஞ்சிபுரம்

சிறந்த மாணவா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவை செய்த மாணவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு சிறந்த மாணவா் விருதினை சென்னை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 9:39 PM
விருது பெற்றவா்களுடன் சென்னை பல்கலையின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள்.
பகிர்:

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவை செய்த மாணவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு சிறந்த மாணவா் விருதினை சென்னை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் முதல்வா் கலை ராம.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலை ஆண்டு தோறும் தன்னுடைய உறுப்புக் கல்லூரியில் தன்னாா்வத்துடன் சேவையாற்றிய மாணவா்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023-2024 கல்வியாண்டில் சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களாக பணியாற்றிய மு.நவீன்ராஜ் மற்றும் உ.ரூபிகா ஆகியோரின் சேவையைப் பாராட்டி சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

மேலும் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மாணவா்களை நெறிப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ம.கணபதிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல இயக்குநா் சாமுவேல் செல்லையா, பேராசிரியா் ஆம்ஸ்ட்ராங், மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன் ஆகியோா் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தாா்.