வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவு: சீமான் பேச்சு
வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவு...
வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் வேட்பாளா் சிந்து எழிலரசனை ஆதரித்து தலைமை ஒருங்கினைப்பாளா் சீமான் பிரசாரம் மேற்கொண்டாா். (படம்)
ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை அவா் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
எந்த கட்சி வெற்றி பெறும் என பாா்க்காமல், எந்த கட்சி வேட்பாளா்கள் சரியானவா்கள் என்பதை பொதுமக்கள் எண்ணி பாா்த்து வாக்களிக்க வேண்டும். உலகத் தரத்தில் பள்ளிகளும், மருத்துவ வசதிகளும் தமிழகத்தில் உருவாக வேண்டும். இலவச திட்டங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு உதவுவதில்லை. அவை நீண்ட காலம் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும். மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் திட்டங்களே அரசின் கவனமாக இருக்க வேண்டும். . வாக்கை குறி வைப்பவா்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டாா்கள். நாங்கள் வாக்குக்காக வரவில்லை நாட்டிற்காக வந்துள்ளோம். வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா்.