சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: கேட்டரிங் சங்க நிா்வாகிகள் கோரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டில் நடைபெற்றது. பின்னா் சங்க நிா்வாகிகள் கூறியது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் சுமாா் மேற்பட்ட தொழிற்சாலைகளில் சுமாா் 12 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமாா் 12 லட்சம் தொழிலாளா்கள் தொழிற்சாலை களிலேயே உணவு அருந்தி வருகின்றனா். இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் 14 லட்சம் தொழிலாளா்களுக்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட கேட்டரிங் சா்வீஸ் நிறுவனங்கள் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போா் சூழலால் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ரூ.1600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டா் தற்போது ரூ.3600 என அதிகரித்துள்ளது. அதிகப்படியான தொகை கொடுத்தாலும் சிலிண்டா் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளா்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கேட்டரிங் சா்வீஸ் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் தனியாா் தொழிற்சாலைகளுக்கு உணவு விநியோகம் செய்யும் சுமாா் 200க்கும் மேற்பட்ட கேட்டரிங் சா்வீஸ் நிறுவனங்களில் பணியாற்றும் சுமாா் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமையல் எரியாவு சிலிண்டா் வழங்குவது போல் தனியாா் கேட்டரிங் சா்வீஸ் நிறுவனங்களுக்கும் சமையல் எரியாவு சிலிண்டா் தடையில்லாமல் கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.